இன்றைய மருத்துவ சிந்தனை: பூவரசு மரம்

செயின் உராய்வதால் உண்டான கறுத்த பகுதிகளில் தடவினால்  கருமை மாறும்.
இன்றைய மருத்துவ சிந்தனை: பூவரசு மரம்

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


பூவரசு மரம்:

  • பழுத்த பூவரசு இலையை அரைத்து தலையில் புழுவெட்டு உள்ள இடத்தில் தடவிக் குளித்து வந்தால் புழுவெட்டு மறைந்து அந்த இடத்தில் தலைமுடி வளரும்.
  • பூவரசு மரப்பட்டையை அரைத்துக்  குளித்து வந்தால் படை , நமைச்சல் குணமாகும்.
  • பூவரசு மரத்தின் இலையை வதக்கி வீக்கத்தின் மீது கட்டினால் வீக்கமும் வலியும் குறையும்.
  • பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளை மிளகு (8) சேர்த்து அரைத்து , மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து தினமும் மூன்று வேளையும் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
  • பூவரசு மரத்தின் காயைத் தண்ணீர் சேர்த்து அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
  • பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்தால் இலேசான பசபசப்புடன் மஞ்சள் நிற சாறு வரும்.  இதை முகத்திலுள்ள கறுப்புப் பகுதிகள், செயின் உராய்வதால் உண்டான கறுத்த பகுதிகளில் தடவினால்  கருமை மாறும்.
  • பூவரசங்காய் (2), செம்பருத்திப்பூ (2), பூவரச பழுத்த இலை (2)  இவற்றை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் பொடுகு நீங்கும். சருமத்தில் தேய்த்து வந்தால் சருமம் பளபளப்பதுடன் கண் கருவளையம் மாறும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com