சரக்கொன்றைப் பூவை எடுத்து அதனுடன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து அரைத்து உடலில் பூசி சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வந்தால் சொறி , கரப்பான் , தேமல் ஆகியவை குணமாகும்.
சரக்கொன்றைப் பூ (ஒரு கைப்பிடி) எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 100 கிராம் நல்லெண்ணெயை சேர்த்து நன்றாக காயவைத்து பூக்கள் சிவந்து வரும் சமயம் அவற்றை இறக்கி பின்பு ஆறவைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு காலை மாலை என இருவேளையும் இரண்டு துளி வீதம் காதில் விட்டு பின்பு பஞ்சைக் கொண்டு காதை அடைத்துவந்தால் காது சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
சரக்கொன்றைப் பூவை நன்றாக வதக்கி பின்பு துவையலாக அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீராத மலச்சிக்கல் தீரும்.
சரக்கொன்றைப் பூ (10 கிராம்) எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி 200 மி.லி அளவுக்கு சுண்டவைத்து அவற்றை வடிகட்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நோய்கள் குணமாகும்.இந்த நீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
சரக்கொன்றைப் பூவை பாலுடன் கலந்து காய்ச்சி குடித்து வந்தால் அனைத்து உள்உறுப்புக்களும் பலப்படும். உடல் மெலிந்தவர்களுக்கு மிகவும் பலன்தரும்.
சரக்கொன்றைப் பூ (சிறிதளவு) எடுத்து இதனுடன் மோர் சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com