இயற்கை நமக்கு அளித்திருக்கும் அற்புதமான உணவு வகைகளில், பழங்கள் பிரதான அம்சமாக விளங்குகின்றன.
ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு வகையான சிறப்பம்சம் உண்டு. ஆனால் எல்லா பழங்களும், எல்லா காலங்களிலும் கிடைப்பது இல்லை. அதற்கு விதிவிலக்காக அமைந்து, எல்லா நாட்களிலும் கிடைக்கும் ஒரே பழம் எது என்றால், அது வாழைப்பழம் ஒன்றுதான்.
எல்லா நாட்களிலும் கிடைக்கும் பழமாக இருப்பதால், அதன் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளாமல், பலரும் அப்பழத்தை மலிவாக நினைத்து விடுகிறார்கள்.
வாழைப்பழங்களில், செவ்வாழை, பூவன், கற்பூரவள்ளி வகைகள் உடல் எடையைக் குறைக்கும்.
மலைப்பழம், நேந்திரம்பழம் உடல் எடையைக் கூட்டும். செவ்வாழை, நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
பேயன் பழம், உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலைக் குளுமையாக வைக்கிறது.
ரஸ்தாளிப்பழம் கண்பார்வைக்கும், இதயத்திற்கும் வலிமையைப் கொடுக்கிறது.
இப்படி ஒவ்வொரு வகை வாழைப்பழத்திற்கும், தனித்தன்மையான மருத்துவ குணம் உண்டு.
சர்க்கரை வியாதி மற்றும் வேறு பிணிகளுக்கு மருந்து உண்பவர்கள், மருத்துவரின் அறிவுரையின்படி செயல்படவும்.
முக்கனிகளில், உலகத்தில், எல்லோராலும், எல்லா நாட்களிலும் சாப்பிடக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த அருமையான, சுவையான பழம்.
ஒரு வாழைப்பழத்தில் நூறு கலோரி அளவு சத்து உள்ளது. ஆனால் கொழுப்புச்சத்து கிடையாது.
முக்கியமாக வாழைப்பழத்தை ஜுஸ் செய்து, அதை உமிழ் நீருடன் சேர்த்து மெதுவாக சிறிது சிறிதாக அருந்த வேண்டும்.
அப்படி அருந்தும் பொழுது, உடலில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறி , உடல் உறுப்புக்கள் சுத்தமாகிறது.
ஏழைகளின் உணவு என்று வழக்கத்தில் கூறப்படும் வாழைப்பழத்தில் கிடைக்கும் மருத்துவப் பயன்களைப் பெற்று, வாழ்வில் வளம் பெறுவோம்.