நந்தியாவட்டப் பூ (50 கிராம்) , களாப் பூ (50 கிராம்) ஆகியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு 250 மில்லி நல்லெண்ணெயில் உறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டு வந்தால் கண்ணில் பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் போன்றவை நீங்கும்.
நந்தியாவட்டை ஒரு துண்டு வேரை எடுத்துக் கொண்டு அவற்றை வாயில் வைத்துக்கொண்டு 10 நிமிடங்கள் நன்கு மெல்ல வேண்டும். பிறகு துப்பி விடலாம். இவ்வாறு செய்தால் அனைத்து பல் வலிகளும் குணமாகும்.
நந்தியாவட்டை வேர் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு அவற்றை நன்கு நசுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு அரை டம்ளர் அளவாக காய்ச்சி இரவில் மட்டும் ஒரு வேளை குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் முற்றிலுமாக வெளியாகும்.
நந்தியாவட்டை வேர்த்தோலை எடுத்து நன்னாரி, கடுக்காய், சுக்கு ஆகியவற்றை கஷாயமாக்கி அந்த கஷாயத்தில் இந்த வேர்தோலை ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் காலை விழுதுபோல் அரைத்து வெந்நீருடன் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் உதிரப் பெருக்கத்தில் ஏற்படும் துர்நாற்றம், ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com