அன்னாசிப் பூவை பொடி செய்து அரை கிராம் அளவு எடுத்து தினந்தோறும் மூன்று வேளையும் உணவுக்குப் பின் நீருடன் சாப்பிட்டு வந்தால் புளிச்ச ஏப்பம் உண்டாகாது.
அன்னாசி பூ வறுத்து பொடித்து பொடி செய்துஅரை ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சீரகம் (அரை ஸ்பூன்) , மிளகு (10) தட்டி சேர்க்கவும். இவை அனைத்தையும் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்துவந்தால் சளி, காய்ச்சல், இருமல் குணமாகும்.
அன்னாசி பூ வறுத்து பொடி செய்து (அரை ஸ்பூன்) , அதிரமதுர பொடி (கால் ஸ்பூன்) , சித்தரத்தை பொடி(கால் ஸ்பூன்) , சிறிது பனங்கற்கண்டு இவை அனைத்தையும் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். பின்பு இவற்றை வடிகட்டி காலை, மாலை என இரு வேலைகளிலும் 100 மில்லி அளவுக்கு குடித்துவந்தால் ரத்தத்தில் உள்ள வைரஸ் குறையும். கல்லீரல் நோய்களான ஹெபடிட்டிஸ் உள்ளிட்டவை குணமாகும். நுண்கிருமிகளை அழிக்கும். அக்கி நோய்க்கு மருந்தாகிறது.
அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து (50 கிராம்) எடுத்து அதனுடன் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி அளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து தைலமாக காய்ச்சவும். இந்த தைலத்தை தசையில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்தினால் தசை வலி குணமாகிறது. தசை பிடிப்பை சரிசெய்கிறது. நெற்றியில் தடவும்போது மன இறுக்கத்தை போக்குகிறது.
அன்னாசிப் பூவை நீர் விட்டு அரைத்து தினந்தோறும் வயிற்றில் பூசிவந்தால் பெரு வயிறு கரையும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com