கண்டங்கத்திரி இலைச்சாறு, வாத நாராயணா இலைச்சாறு, முடக்கத்தான் சாறுஆகியவற்றை தலா(100 மி.லி) எடுத்து, அத்துடன் ஒரு லிட்டர் நல்லெண்ணெய்சேர்த்து தைல பதமாய்க் காய்ச்சி இறக்கி, பின்னர் 50 கிராம் பச்சைக் கற்பூரம் தூள் செய்து சேர்க்கவும். இந்த தைலத்தில் தேவையான அளவு எடுத்து சூடுசெய்து கால்மூட்டுகளில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் சகலவலிகளும் உடனே குணமாகும்.
கண்டங்கத்திரிப் பூக்களை (100 கிராம்) அளவு உலர்த்தி எடுத்துக் கொண்டு.அத்துடன் சீரகம், திப்பிலி, நெல்லிமுள்ளி ஆகியவற்றை தலா (10கிராம்) சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் (2 கிராம்) அளவு பொடியைப் பாலில் கலந்து 48 நாட்கள்(ஒரு மண்டலம்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூர்மையாகும்.
கண்டங்கத்தரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தினந்தோறும் (1கிராம்) அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுத்து வந்தால் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமல் குணமாகும்.
கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு (1 லிட்டர்) அளவுக்கு எடுத்துக் கொண்டு அத்துடன் நீரடி முத்து எண்ணெய் (250 மி.லி) அளவு சேர்த்து காய்ச்சி தைலபதத்தில் வடித்து வைத்துக் கொண்டு வெண் குஷ்டம் உள்ள இடங்களில் பூசி வந்தால் வெண்புள்ளிகள் மறையும்.
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவந்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல் லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வந்தால் அவை நீங்கும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com