புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடித்து வந்தால் பசியின்மை, ஈரல் வீக்கம் சரியாகும். ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகிறது.
புங்க எண்ணெய் (100 மில்லி) , பரங்கி பட்டை சூரணம் ( 50கிராம்) ஆகியவற்றைச் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இந்த தைலத்தை சொரியாசிஸ் உள்ளவர்கள் பூசி வந்தால் சொரியாசிஸ் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும்.
புங்க இலை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு வடிகட்டி துணியில் எடுத்து தலையில் பொடுகினால் அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவி 10 நிமிடம் கழித்து குளிந்து வந்தால் தலையில் ஏற்படும் அரிப்பு உடனடியாக சரியாகும்.
புங்க எண்ணெய் (250 மில்லி) , எலுமிச்சை சாறு (100 மில்லி) இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ள இடங்களில் தடவி சுமார் ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் மூட்டு வலி , கீல் வாதம் , வீக்கம் ஆகியவை சரியாகும்.
புங்க விதை பொடி(அரை ஸ்பூன்) அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். தோல் நோய்களுக்கு மருந்தாகும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com