பேரீச்சம்பழம் உண்டதும் உடலுக்கு புத்துணர்ச்சியும் சக்தியும் கிடைக்கிறது..குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சம் பழத்திற்கு உண்டு..பெருங்குடற்பகுதியில் புற்று நோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சம் பங்கெடுக்கிறது..பேரீச்சையில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது..குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்று நோய்களுக்கு எதிராக செயல் படக் கூடியது பேரீச்சை..பேரீச்சம் பழம் எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது..சில பெண்களுக்கு மாதவிலக்கின் போது கருப்பையில் கேளாறுகள் தோன்றும். அவர்கள் தொடந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். .சிலருக்கு வாயில் அதிக அளவில் கோழை தோன்றும். பேரீச்சம் பழம் கோழையை அறுத்து வெளியேற்றும்..எவ்வித வயிற்றுக் கோளாறுகளுக்கும் பேரீச்சம் பழம் உண்பது நல்லது..உடல் பொலிவும், வனப்பும் அற்றவர்கள் தொடர்ந்து சில பேரீச்சம் பழங்களை உண்டு வந்தால் அழகையும் ஆரோக்கியத்தையும் சிறப்பாக பெறலாம்..விதை நீக்கிய பேரீச்சம் பழத்தையும் சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்து பாலில் சேர்த்துக் குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும் எடைக் கூடும்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
பேரீச்சம்பழம் உண்டதும் உடலுக்கு புத்துணர்ச்சியும் சக்தியும் கிடைக்கிறது..குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சம் பழத்திற்கு உண்டு..பெருங்குடற்பகுதியில் புற்று நோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சம் பங்கெடுக்கிறது..பேரீச்சையில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது..குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்று நோய்களுக்கு எதிராக செயல் படக் கூடியது பேரீச்சை..பேரீச்சம் பழம் எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது..சில பெண்களுக்கு மாதவிலக்கின் போது கருப்பையில் கேளாறுகள் தோன்றும். அவர்கள் தொடந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். .சிலருக்கு வாயில் அதிக அளவில் கோழை தோன்றும். பேரீச்சம் பழம் கோழையை அறுத்து வெளியேற்றும்..எவ்வித வயிற்றுக் கோளாறுகளுக்கும் பேரீச்சம் பழம் உண்பது நல்லது..உடல் பொலிவும், வனப்பும் அற்றவர்கள் தொடர்ந்து சில பேரீச்சம் பழங்களை உண்டு வந்தால் அழகையும் ஆரோக்கியத்தையும் சிறப்பாக பெறலாம்..விதை நீக்கிய பேரீச்சம் பழத்தையும் சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்து பாலில் சேர்த்துக் குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும் எடைக் கூடும்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்