குழந்தைகளின் ஆரோக்கியம் பெற பச்சை பட்டாணி (3 தேக்கரண்டி) , கேரட், புதினா, பீன்ஸ் இவை அனைத்தையும் சேர்த்து வேகவைத்து அதனுடன் உப்பு சேர்த்து சூப்பாக சிற்றுண்டிக்கு பதில் கொடுத்து வந்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
பச்சை பட்டாணியை (3 தேக்கரண்டி அளவு) வேகவைத்து அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகு சேர்த்து வாரம் இரண்டு முறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடல், மனம் பலப்பட்டு ஆரோக்கியமாக காணப்படுவர்.
மனநல பிரச்சனையில் இருந்து விடுபட பச்சைப் பட்டாணி (100 கிராம்) எடுத்து வேகவைத்து சுண்டல் செய்து சாப்பிட்டு வந்தால் மனநலம் பிரச்சனையில் இருந்து விரைவில் குணமடைவார்கள்.
இதயநோய் , பக்கவாதம் வராமல் தடுக்க பச்சை பட்டாணி(100 கிராம்) எடுத்து காய்கறிகளுடன் சேர்த்து தினந்தோறும் சாப்பிட்டு வருவதன் மூலம் இவற்றில் உள்ள கரையாத நார்சத்து நம் உடம்பில் உள்ள கொழுப்பு சத்தை குறைத்து இதயநோய், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
உடல் சோர்வு நீங்கி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பச்சை பட்டாணியை தினசரி உணவில் சேர்த்து கொண்டு வரும் பொழுது இவற்றில் உள்ள இரும்புசத்து அதிகம் இருப்பதால் நம் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை போக்கி உடல் சோர்வையும் நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது .
ரத்தம் , நுரையீரல் , ஆசனவாய் புற்றுநோய் வராமல் தடுக்க தினந்தோறும் பச்சை பட்டாணியை சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள விட்டமின் (சி ) , ரத்த புற்று, நுரையீரல் புற்று, ஆசனவாய் புற்று போன்ற எல்லா புற்று நோய்களும் வராமல் தடுக்கிறது.
வயதானவர்களுக்கு உண்டாகும் கண்புரை வளர்ச்சியை குறைக்க பச்சை பட்டாணியை வயதானவர்கள் வேகவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் இவற்றில் லுட்டின்(Lutin) என்ற கரோட்டீனாய்டு(carotenoid) , வயதானவர்களுக்கு கண்ணில் ஏற்படும் கண் புரை வளர்தலை குறைக்கிறது.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com