இன்றைய மருத்துவ சிந்தனை: சிறுகுறிஞ்சான்

ஈரல் பாதிப்பு குணமாக
இன்றைய மருத்துவ சிந்தனை: சிறுகுறிஞ்சான்


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


சிறுகுறிஞ்சான்:

  • சிறுநீரில்  உள்ள சர்க்கரை அளவு குறைய சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.
  • சர்க்கரை வியாதியின் வீரியம் குறைய சிறுகுறிஞ்சாக் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.
  • நாவற்பழக் கொட்டையையும், சிறுகுறிஞ்சான் கீரையையும் நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் இரண்டு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி பொடி போட்டு காய்ச்சி ஒரு டம்ளராக  கஷாயமாக்கி குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • வயிற்றுப் புண் , வாய்ப்புண் குணமாக சிறுகுறிஞ்சாக் கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து காரம் சேர்க்காமல் வேகவைத்து கடைந்து அதனுடன் நெய் கலந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
  • சிறுகுறிஞ்சாக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து உணவில் சேர்த்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால்  நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • ஈரல் பாதிப்பு குணமாக சிறுகுறிஞ்சாக் கீரையை வேகவைத்து அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஈரலில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com