முருங்கைக் கீரையில் இவ்வளவு மருத்துவ பலன்களா!

ஓர் அவுன்ஸ் முருங்கைக்கீரையின் சாற்றில் ஓர் அவுன்ஸ் தேன் கலந்து படுக்கைக்குப்
முருங்கைக் கீரையில் இவ்வளவு மருத்துவ பலன்களா!

ஓர் அவுன்ஸ் முருங்கைக்கீரையின் சாற்றில் ஓர் அவுன்ஸ் தேன் கலந்து படுக்கைக்குப் போகும் முன் சாப்பிட வயிற்றிலுள்ள எல்லாவிதமான பூச்சிகளையும் வெளியேற்றும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இக்கீரையின் சாறு ஓர் அவுன்ஸ் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இது இரத்தத்தோடு சேரும் கொழுப்பையும் குறைக்கும்.

இக்கீரையின் சாற்றோடு தேனும், சுண்ணாம்பும் சேர்த்துத் தொண்டையில் தடவ, குரல்கம்மல், இருமல், நாவறட்சி நீங்கும்.

இலையை மட்டும் சுத்தமாக அரைத்துப் பிழிந்து இச்சாற்றை கண்களில் விட்டுக்கொண்டால் மெட்ராஸ் ஐ என்று சொல்லும் கண்வலி குணமாகும்.

குழந்தை பிறந்து பால்சுரப்பு இல்லாத தாய்மார்களுக்கு முருங்கைப் பிஞ்சை, மிளகுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட கொடுத்து வந்தால் பால் சுரப்பு மிகுதிப்படும்.

முருங்கைக்கீரையின் சாற்றுடன், உப்பு மற்றும் வசம்புத் தூளையும் சேர்த்து குழைத்து வயிற்றின் மேல் பற்றாகப் போட வயிற்று வலியுடன் கூடிய உப்பிசம் சரியாகும்.

முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான கண்வலி, கண்எரிச்சல், கண்களிலிருந்து நீர்வடிதல் போன்றவை குணமாகும். பார்வை மங்கல் மற்றும் மாலைக்கண் நோய் குறையிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

முருங்கைக்கீரையை ஆய்ந்து மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் கைக்கால் அசதி, உடல்வலி நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.

உதிரப்போக்கைக் கட்டுப்படுத்த முருங்கைப்பிஞ்சை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com