சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முள்ளங்கிக் கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்துப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இருவேளையும் தலா இரண்டு கிராம் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் தீர முள்ளங்கிக் கீரைச் சாறு எடுத்து (அரை டம்ளர்) அதனுடன் சிறிதளவு வெல்லம் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய்கள்அனைத்தும் குணமாகும்.
சிறுநீர் தாராளமாகப் பிரிய முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை வேகவைத்துச் சாப்பிட்டுவந்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
சிறுநீர் கற்கள் கறைய முள்ளங்கிக் கீரைச் சாற்றை (30மில்லி) அளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் சிறு நீரகக் கற்கள் கரையும்.
ஆண்மை , உயிரணுக்கள் அதிகரிக்க முள்ளங்கிக் கீரை சாற்றையும் (அரை டம்ளர்) எடுத்து அதனுடன் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
முள்ளங்கிக் கீரைச் சாற்றில் நெருஞ்சில் முள்ளை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை எனஇருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
கோவை பாலா, இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist