சைனஸ் குணமாக மணலிக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும் 2 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் சைனஸ் பிரச்சனை குணமாகும்.
நன்றாகத் தூக்கம் வர மணலிக் கீரை, துளசி, வில்வம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவு நேரத்தில் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
சைனஸ் குணமாக மணலிக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும் 2 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் சைனஸ் பிரச்சனை குணமாகும்.
வறட்டு இருமல் குணமாக மணலிக் கீரைச் சாறு (அரை டம்ளர்) எடுத்து அதனுடன் உலர்ந்த திராட்சை(5) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
ரத்த அழுத்தம் சீராக மணலிக் கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து , உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை என இருவேளையும் 2 கிராம் அளவுச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் நிற்க மணலிக் கீரையுடன் , மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் குடித்து வந்தால் மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் குணமாகும்.
மூட்டு வலி , வாத வலி அனைத்தும் தீர மணலிக் கீரை(சிறிதளவு) எடுத்து அதனுடன் மிளகு , பூண்டு ,மஞ்சள் , ஓமம் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் , வாத வலிகள் போன்றவை குணமாகும்.
மன அழுத்தம் , மனக்கோளாறு நீங்க மணலிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை , மாலை என இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மன உளைச்சல் , மன அழுத்தம் , மனநலக் கோளாறுகள் குணமாகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 / Covaibala15@gmail.com