சர்க்கரை நோயை ஏன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்?

சர்க்கரை அதிகம் இருந்தால் அதற்கேற்ற மருந்துகளை உட்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். தேவைப்படுமாயின் இன்சுலின் ஊசி போட்டு சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
சர்க்கரை நோயை ஏன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்?

பரிசோதனைகள்

தாயின் எடை, ரத்த அழுத்தம், வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி, சிறுநீரில் உப்பு, சர்க்கரை அளவு ஆகியவற்றுடன் தேவைப்படுமாயின் கூடுதல் பரிசோதனைகளும் செய்யப்படும்.

ஏழு, எட்டு, ஒன்பது மாதங்களில், 'ப்ரெக்னென்ஸி இன்ட்யூஸ்ட் ஹைபர்டென்ஷன்' (பி.ஐ.ஹெச்) மற்றும் ஜெஸ்டேஷனல் டயாபடீஸ் மெல்லிடஸ் (ஜி.டி.எம் ) என்ற பிரச்னை ஒரு சிலருக்கு ஏற்படும். அப்போது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை ஏற்படும். இவர்களுக்குக் கூடுதல் மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் வலிப்பு வரலாம்.  இது வயிற்றில் உள்ள கருவைப் பாதிக்காமல் இருக்க உடனடியாகப் பிரசவம் நிகழ்த்த வேண்டி இருக்கும். 

சர்க்கரை நோயை ஏன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்?

சர்க்கரை அதிகம் இருந்தால் அதற்கேற்ற மருந்துகளை உட்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். தேவைப்படுமாயின் இன்சுலின் ஊசி போட்டு சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் வயிற்றில் குழந்தை மிகவும் பெரியதாகி, குழந்தையைச் சுற்றி உள்ள நீர் அதிகரித்துவிடும்.  இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். டெலிவரிக்குப் பிறகு குழந்தையின் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும். ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிடும் அபாயமும் இருக்கிறது.

குழந்தையின் அளவு பெரியதாக இருந்தால் 'ப்ரீ டெர்ம்' டெலிவரிக்கான சாத்தியம் அதிகம் உள்ளது. பிரசவமும் கஷ்டமாக இருப்பதால் ஆபரேஷன் டெலிவரியின் சாத்தியமே அதிகம். அதனால்தான் கர்ப்பிணிகளை சர்க்கரை நோய் வராமல் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்தத் தருணத்தில் உணவுக் கட்டுப்பாடு, சர்க்கரைக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் முக்கியம்.

பரிசோதனைகளால் எதையெல்லாம் கண்டறிய முடியும்?

குறைப் பிரசவம் (ப்ரீ டெர்ம் லேபர்) ஏற்பட வாய்ப்பு உள்ளதா, அல்லது வளர்ச்சிக் கோளாறு ஏதேனும் உள்ளதா (ஐ யூ ஜி ஆர்) இன்ட்ரா யூடெரின் க்ரோத் ரெஸ்ட்ரிக்ஷன்) உள்ளதா என்று கண்டறிய முடியும்.

கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடை குறைவாக இருந்தால் அதை உடனே கண்டுபிடித்துவிட முடியும். பனிக்குட நீர் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் கண்டறியலாம். குழந்தை வளரும் கர்ப்பப்பை சூழ்நிலைகளை, தன்மைகளைக் கண்டறிய முடியும்.  இப்படி, வயிற்றில் குழந்தையின் இருப்பிடம், நீர்ச்சத்து, நஞ்சின் இருப்பிடம், தலை இறங்கியிருக்கும் அளவு,  பிரசவம் ஆகக்கூடிய தேதி, குழந்தையின் எடை போன்றவற்றைக் கண்டறிவதின் மூலம் குழந்தை பிறக்கும் இயல்பையும், (தேதியையும் ஓரளவு கணிக்க முடியும். 

ஸ்கேன்

நவீன மருத்துவக் கருவிகளிலேயே 'ஸ்கேன்', மகளிர் மகப்பேறு மருத்துவத்தில் ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.

பிரசவ சமயத்தில் பிரசவம் 12 மணி நேரங்களுக்கு மேல் நீடித்தாலோ, குழந்தையின் துடிப்பு உணரப்படவில்லை என்று பெண்மணிகள் கர்ப்பக் காலத்தில் மருத்துவரைச் சந்திக்க வந்தாலோ, குழந்தைக்கு இருதயத் துடிப்பு இருக்கிறதா என்பதை ஸ்கேனர் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

இதயத் துடிப்பை ஈ.ஸி.ஜி. டாப்ளர் போன்ற ஸ்கேன்கள் பதிவு செய்து கொடுக்கும். இதயத் துடிப்பு அதிகரித்தாலோ, மாறுதல்கள் இருந்தாலோ அது குழந்தையின் மூச்சுத் திணறலைச் சுட்டிக் காட்டுவதால், உடனடியாக அதற்கான வைத்திய முறைகளைக் கையாண்டு அறுவைசிகிச்சை செய்தாவது குழந்தையைக் காப்பாற்ற முடியும்.

முந்தைய காலம் போல் அல்லாது ஒன்றிரண்டு குழந்தைகளே 'இன்றைய குடும்பம்' என்று ஆகிவிட்ட சூழ்நிலையில், கர்ப்ப காலத்தில் தாய் & சேய் நலத்தை நல்லமுறையில் காத்து, மிகவும் சாதாரண அறுவை சிகிச்சைகூட இல்லாத முறையில் பெற்றெடுப்பதற்கு இந்த கர்ப்பக் கால பராமரிப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com