பாரமுல்லா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்த தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு தீவிரவாதிகளும் ஜெய்ஷ் - இ- முகம்மது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
2 தீவிரவாதிகளும் வைத்திருந்த ஏகே-47 ரக துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களையும் ராணுவத்தினர் கைப்பற்றினர்.