புதுதில்லி: எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீபாவளியை கொண்டாடுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்காக, ‘எனது அரசாங்கம்’ என்ற சமூகவலைத்தளம் மூலமும், 'நரேந்திர மோடி' என்ற ‘ஆப்’ வழியாகவும் #Sandesh2Soldiers என்ற பிரசார இயக்கத்தை பிரதமர் மோடி துவக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை பிரதமர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நான் நமது வீரர்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன். நமது நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் தீரத்தை நீங்களும் நினைவுகூர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பி வையுங்கள். நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் அவர்களை வாழ்த்தினால், நமது வீரர்களின் பலம் 125 கோடி மடங்கு அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.