ஹைதராபாத்: தெலங்கானாவில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், பல உற்பத்திக் கூடங்கள் பாதிக்கப்பட்டு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர்.
தெலங்கானாவின் பல்வேறு தொழிற்பேட்டைகள் நிறைந்த பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால், உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டு பணியாளர்கள் வேலை இழந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
தங்களது பணியிடங்கள் மீண்டும் பணி செய்யும் சூழலுக்கு மாற குறைந்தது ஒரு மாத காலம் ஆகும், அதுவரை எங்களுக்கு வருமானம் கிடைக்காது என்கிறார்கள் பல கூலித் தொழிலாளர்கள்.