நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. இதையடுத்து அவர்களை ஒடுக்கும் முயற்சியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நாராயண்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் மேலும் 3 வீரர்கள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அங்குத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.