பஞ்சாப்: இந்திய எல்லைப் பகுதியில் பள்ளிகள் மூடல்

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து.

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து.

சர்வதேச எல்லையோரம் அமைந்திருக்கும் கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் பஞ்சாப் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

சர்வதேச எல்லைக்கு அருகே 10 கி.மீ. தொலைவில் உள்ள கிராம மக்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களில் இருந்து வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது.

இந்திய எல்லையைத் தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com