புது தில்லி: காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் செயல்பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது, காவிரி விவகாரத்தில் மீண்டும் மீண்டும் நீதிமன்றம் வருவது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் உச்ச நீதின்றத்தின் உத்தரவை பின்பற்றித் தான் ஆக வேண்டும்.
கடந்த இரண்டு உத்தரவுகளை மீறிய கர்நாடக அரசுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடகா அக்டோபர் 1ம் தேதி முதல் தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று மிகவும் கண்டிப்போடு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.