காவிரியில் தமிழகத்துக்கு 6 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வீதம் 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு 6 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வீதம் 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசு, காவிரியில் நாளை முதல் அக்டோபர் 6ம் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்போடு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்காமல், காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு இன்று மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com