மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

காவிரி நதிநீர் விவகாரத்தில், இன்னும் மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


புது தில்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில், இன்னும் மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, காவிரி விவகாரத்தில்  இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அமைச்சர் உமா பாரதி நடத்திய பேச்சுவார்த்தை குறித்த அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதையடுத்து, வரும் செவ்வாய்க்கிழமைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போதும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வியாழக்கிழமைக்கு வழக்கை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து நீதிபதிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com