ராணுவ தாக்குதலுக்கு மோகன் பாகவத் பாராட்டு

பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், "நாம் எதற்காக காத்திருந்தோமோ அது தற்போது நடந்துவிட்டது'
ராணுவ தாக்குதலுக்கு மோகன் பாகவத் பாராட்டு

பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், "நாம் எதற்காக காத்திருந்தோமோ அது தற்போது நடந்துவிட்டது' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பாராட்டு தெரிவித்தார்.
காஷ்மீரில் கி.பி. 950-இல் வாழ்ந்த தத்துவவியலாலரான ஆசார்ய அபிநவகுப்தாவின் 1,000-ஆவது பிறந்த தின விழா, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று மோகன் பாகவத் கூறியதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லையையொட்டி அமைந்திருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள். நாம் எதற்காக காத்திருந்தோமா அது தற்போது நடந்து விட்டது என்று பாகவத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com