புது தில்லி: நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாஜக பிரமுகர் அஷ்வினி பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குறைந்த அளவு மது அருந்துவது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ரெட் ஒயின் அருந்துவது இதயத்துக்கு நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கருத்துத் தெரிவித்தனர்.
மேலும், நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.