கல்வித் தகுதியை பிரதமர் மோடி ரகசியமாக வைத்திருப்பது ஏன்? திக்விஜய் சிங் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி தனது கல்வித் தகுதியை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியின் 
கல்வித் தகுதியை பிரதமர் மோடி ரகசியமாக வைத்திருப்பது ஏன்? திக்விஜய் சிங் கேள்வி

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது கல்வித் தகுதியை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பிரதமரின் கல்வித் தகுதி குறித்து கேள்வி எழுப்புவது குற்றமா? தனது கல்வித் தகுதி குறித்து பிரதமர் மோடி ஏன் ரகசியம் காக்கிறார். இதுவே, நாட்டு மக்களுக்கு தனது கல்வித் தகுதி குறித்து பொய் தெரிவித்துள்ளார் என்பதற்கு ஆதாரம் ஆகும் என்று திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com