ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான காசோலைக்கு ரூ.100 கட்டணம்: எஸ்பிஐ கார்டு வசூலிப்பு

ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான மதிப்பில் வழங்கப்படும் காசோலைக்கு ரூ.100 கட்டணத்தை 'எஸ்பிஐ கார்டு' நிறுவனம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான காசோலைக்கு ரூ.100 கட்டணம்: எஸ்பிஐ கார்டு வசூலிப்பு

ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான மதிப்பில் வழங்கப்படும் காசோலைக்கு ரூ.100 கட்டணத்தை 'எஸ்பிஐ கார்டு' நிறுவனம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, ஜிஇ கேபிடல் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக எஸ்பிஐ கார்டு நிறுவனம் உள்ளது. நாடு முழுவதும் கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) வழங்கும் பணியை 'எஸ்பிஐ கார்டு' செய்து வருகிறது. இதில் 40 லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில், 'எஸ்பிஐ கார்டு' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ரூ.2 ஆயிரம் அல்லது ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான தொகை மதிப்புடைய காசோலைக்கு ரூ.100 கட்டணம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வசூலிக்கப்படுகிறது. ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புடைய காசோலைக்கு கட்டணம் கிடையாது. இலவசமாகும்.
மத்திய அரசின் கொள்கையின்படி, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே இந்த முடிவின் நோக்கமாகும் என்று 'எஸ்பிஐ கார்டு' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஜய் ஜசுஜா கூறுகையில்,'முதல்முறையாக கடன் அட்டை பெறுவோருக்கு வழங்கப்படும் 'எஸ்பிஐ கார்டு உன்னதி' அட்டையை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், காசோலை மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com