ஆதார் எண்ணை பல திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் அதனை மீற கட்டாயமாக்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு
ஆதார் எண்ணை பல திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

புதுதில்லி: ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் அதனை மீற கட்டாயமாக்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசின் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், ஆதார் எண் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், அரசின் திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் அதனை மீற கட்டாயமாக்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு மத்திய அரசின் தரப்பில், அரசின் திட்டங்களுக்கு பான் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டு முறைகோடுகள் நடைபெறுவதால் அதனை தடுக்கும் விதமாகவே ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com