தில்லியில் டிடிவி. தினகரன் ஆஜர்படுத்தப்பட உள்ள நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், அவரது நெருங்கிய நண்பரும் பெங்களூரைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் இருவரும் தில்லி காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
இருவரும் தில்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதையொட்டி நீதிமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 எஸ்ஐக்கள் தலைமையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினகரனிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்த விரும்பினால் அவர் போலீஸ் காவலில் இன்று எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.