ஜாதவின் உடல்நலம் குறித்த சான்று: பாகிஸ்தானிடம் கோரியது இந்தியா

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷண் ஜாதவின் உடல்நலம் குறித்த சான்றினை அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது.

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷண் ஜாதவின் உடல்நலம் குறித்த சான்றினை அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே வியாழக்கிழமை கூறியதாவது:
குல்பூஷண் ஜாதவ் ஓராண்டுக்கும் மேலாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியா சார்பில் அவரை இதுவரை யாரும் சந்திக்க முடியவில்லை. ஆதலால், அவரது உடல்நலம் குறித்து அறிய வேண்டியது அவசியமாகியுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலே புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, குல்பூஷண் ஜாதவின் உடல்நலம் குறித்த சான்றினை வழங்குமாறு பாகிஸ்தான் அரசிடம் அவர் கோரியுள்ளார் என்றார் கோபால் பாக்லே.
வெளிப்படையான விசாரணை - பாகிஸ்தான்: இதனிடையே, குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்கு விசாரணை மிகவும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com