ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஹக்ரிபோரா கிராமத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இடையே இன்று அதிகாலை 4.30 மணி முதல் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
சமீபகாலமாக, புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகமாக உள்ள நிலையில், ஜூலை 30 ஆம் தேதி புல்வாமா மாவட்டம் துபக் பகுதியில் இரண்டு ஹஜ் புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரிடமிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.