கேரள தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு 

ஆகஸ்ட் 18-ந் தேதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கேரள தனியார் பேருந்து உரிமையாளர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.
கேரள தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு 

கேரளாவில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் கேரள அரசிடம் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதிலும், முக்கியமாக உயர்த்தப்பட்ட சாலை வரி மற்றும் தொடர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளால் டிக்கெட் விலை உயர்ந்துவது தொடர்பாக குறைந்தபட்ச டிக்கெட் விலையாக ரூ.9 நிர்ணயிக்க வேண்டும். 

தேசிய நெடுஞ்சாலைகளில் நீதிபதி ராமச்சந்திர கமிஷனின் பரிந்துரைப்படி வரி அமல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். 

இந்நிலையில், உயர்த்தப்பட்ட சாலை வரி மற்றும் டிக்கெட் விலை உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18-ந் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போதவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com