ஆண்டுக்கு ரூ.1,04,500 கோடி செலவு செய்திருக்கும் மத்திய அரசு: எதற்காக என்றால்...

இந்தியாவில் புகையிலை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு ஒரு ஆண்டில் மட்டும் ரூ.1,04,500 கோடியை செலவு செய்திருக்கிறது.
ஆண்டுக்கு ரூ.1,04,500 கோடி செலவு செய்திருக்கும் மத்திய அரசு: எதற்காக என்றால்...


புது தில்லி: இந்தியாவில் புகையிலை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு ஒரு ஆண்டில் மட்டும் ரூ.1,04,500 கோடியை செலவு செய்திருக்கிறது.

இந்த விஷயம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தியாவில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் புகையிலையை பயன்படுத்துவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் மரணம் அடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் புகையிலை தொடர்பான நோய்களுக்கு மத்திய அரசு ரூ.1,04,500 கோடியை செலவிட்டிருப்பதாகவும், இது தொடர்பான தகவல் இதுவரை வெளியிடப்படவே இல்லை என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தொகையானது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் எவ்வளவு அதிகம் என்பது குறித்தோ, எந்த வகைகளில் இந்த செலவு மேற்கொள்ளப்பட்டது குறித்தோ விரிவான விளக்கங்கள் கிடைக்கப்பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com