காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம், குல்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனிடையே சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த மற்றொரு சண்டையில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.