மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்ட மோதலில் துணை கண்காணிப்பாளர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் போலீஸ் துணை கண்காணிப்பாளர் கொல்லப்பட்டார்.
மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்ட மோதலில் துணை கண்காணிப்பாளர் பலி

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் போலீஸ் துணை கண்காணிப்பாளர் கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நாந்த்காவ்ன் மாவட்டம் பாவே காட்டில் பகுதியில் இன்று பிற்பகல் E-30 பட்டாலியனைச் சேர்ந்த போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்து மாவோயிஸ்டுகள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு போலீஸார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ் துணை கண்காணிப்பாளர் கொல்லப்பட்டார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.

மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com