ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி சுட்டுக் கொலை

புல்வாமா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் சம்போராவில் நேற்றிரவு அவந்திபொரா போலீஸ், ஆர்ஆர் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் கூட்டாக நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு ராணுவ வீரர்கள் அவர்களை விரட்டி துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது, இரண்டும் தீவிரவாதிகள் ராணுவத்தின் படியில் சிக்கினர். அதில் ஒருவனை வீரர்கள் சுட்டுக் கொன்ற நிலையில், மற்றொருவன் இருட்டைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளான். தப்பிச் சென்ற தீவிரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகின்றன.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின், அபு இஸ்மாயில் குழுவை சேர்ந்த உமர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து, புல்வாமா மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com