கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா அருகே அருகே செம்மரம் வெட்டியதாக 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் சேலம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்கள் அதிக கூலிக்கு ஆசைப்பட்டு, ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டச் சென்று கைதாவது தொடர் கதையாகி விட்டது.
அந்த வகையில் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ராஜம்பேட்டை என்ற பகுதியில் செம்மரம் வெட்டியதாக எட்டு தமிழர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செயயப்பட்டவர்களிடம் இருந்து ரூ. மூன்று கோடி மதிப்புள்ள செம்மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.