மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடியா மாவட்டத்தின் க்ரிஷ்நகரில் இருந்து பாலசே பாரா நகருக்கு பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது. இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.