48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி: நெஞ்சை அதிரச் செய்யும் சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் குறைபாட்டால் கடந்த இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் பலியான  சம்பவம் நடந்துள்ளது.
48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி: நெஞ்சை அதிரச் செய்யும் சம்பவம்!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் குறைபாட்டால் கடந்த இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் பலியான  சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் சிலிண்டர் செயல்பாடு பிரச்சினையின் காரணமாக கடந்த  48 மணி நேரத்தில், 30 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.

மனதினை அதிரச் செய்யும் இந்த சம்பவத்திற்கு கரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com