மக்களவையில் இயற்கைப் பேரிடர் தொடர்பான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றபோது, காங்கிரஸ் எம்.பி.யின் பேச்சை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திருத்தினார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகாய், தனது மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறித்து பேசினார். அப்போது, வெள்ளம் காரணமாக, 750 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று ஹிந்தியில் கூறினார்.
உடனடியாகக் குறுக்கிட்டுப் பேசிய சுமித்ரா மகாஜன், ''அவர்கள் கொல்லப்பட்டவில்லை; மரணம் அடைந்துவிட்டனர்'' என்று திருத்தினார். அதற்கு, தனது பேச்சை திருத்தியதற்காக, சுமித்ரா மகாஜனுக்கு கெளரவ் கோகோய் நன்றி தெரிவித்தார்.