ராஜஸ்தான் மாநில பல்கலைக்கழங்கள், கல்லூரிகளில் இந்த ஆண்டு காந்தி ஜெயந்திக்கு (அக்டோபர் 2) விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கிரண் மகேஸ்வரி கூறியதாவது:
மாநில அரசு நடத்தும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கல்வி நிலையங்களில் வைத்து காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும்.
இது தொடர்பாக, மாநில அரசின் புதிய விடுமுறை நாள்கள் பட்டியல் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து சில நாள்களில் மாநிலத்தில் உள்ள 12 அரசு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்படும் என்றார் அவர்.