சண்டீகரில் ஐஏஎஸ் அதிகாரியின் மகளை காரில் துரத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஹரியாணா மாநில பாஜக தலைவர் மகன் விகாஸ் பராலா, அவரது நண்பர் ஆஷிஷ் குமார் ஆகியோரின் நீதிமன்றக் காவல் வரும் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சண்டீகரில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகள் வர்ணிகா என்பவரை விகாஸýம், அவரது நண்பரும் காரில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கடந்த 4-ஆம் தேதி இரவு துரத்திச் சென்றனர். இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், விகாûஸயும், அவரது நண்பரையும் கைது செய்து விசாரித்த போலீஸார், விகாஸ் அந்த மாநில பாஜக தலைவரின் மகன் என்பதை அறிந்ததும் ஜாமீனில் விட்டுவிட்டனர்.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதும், மாநிலத்தை ஆளும் பாஜக அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, விகாஸýம், அவரது நண்பரும் கடந்த 9-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் 2 பேரையும் 2 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த போலீஸ் காவல் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சண்டீகர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் கௌரவ் தத்தா முன்னிலையில் விகாஸ், ஆஷிஷ் குமார் ஆகியோர் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது காவல்துறை தரப்பில், இருவரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்றுக் கொண்டு, அவர்கள் இருவரையும் வரும் 25-ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதித்துறை நடுவர் கௌரவ் தத்தா உத்தரவிட்டார்.
முன்னதாக, சண்டீகரில் ஐஏஎஸ் அதிகாரியின் மகள் வர்ணிகாவுக்கு ஆதரவு தெரிவித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரணியாக வந்தனர்.