காஸியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் அருகே தூங்கிக்கொண்டிருந்த விவசாயி சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டம் போஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பிரதாம்கர் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை காலை தூங்கிக்கொண்டிருந்த விவசாயி ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் ஏழு சுற்று சுட்டதால் தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போஜ்பூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.