அவுரங்காபாத் அருகே உள்ள பாந்த்லா பாட்டா பகுதி அருகே பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் சௌபானே உயிரிழந்தார்.
அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், சஞ்சய் மற்றும் தாணே நகர காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ண பர்ணேகர் மற்றும் கட்சி நிர்வாகி ராமகாந்த் மாத்ரே ஆகிய 3 பேரும் காரில் மும்பை நோக்கி வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் சௌபானே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.