இந்தியா
நாடு முழுவதும் கிராம அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நாடு முழுவதும் உள்ள கிராம அஞ்சல் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுதில்லி: நாடு முழுவதும் உள்ள கிராம அஞ்சல் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8 மணி நேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இன்று முதல் ஈடுபட்டுள்ளனர்.
ஏழாவது ஊதியக் குழுவில் அஞ்சல் ஊழியர்களின் பிரச்னைகள் பற்றிய அறிக்கையை அளிக்க அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி அரசுக்கு வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கிராமிய அஞ்சல் ஊழியர்களும் அஞ்சல் இலாகா ஊழியர்தான் என்ற தீர்ப்பாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கிராம அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கிவுள்ளனர்.