புதுதில்லி: ஏர் இந்தியா விமானங்கள் சேவையில் முப்படையினருக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 71வது சுதந்திர தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பை ஏர் இந்தியா வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று முப்படை வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு உள்நாட்டு பயணத்திற்கான விமானக் கட்டணத்தில் ஏற்கனவே சலுகை வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.