கொழும்பு: விசா காலம் முடிந்த பிறகும் இலங்கையை விட்டு வெளியேறாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 பெண்கள் உட்பட 27 இந்தியர்களை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலை தேடி இலங்கைக்கு அதிகளவில் செல்கின்றனர். குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகயளவில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், விசா காலம் முடிந்தும் இலங்கையை விட்டு வெளியேறாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 பெண்கள் உட்பட 27 இந்தியர்களை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதிகபட்சமாக தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் ஜாப்னா நகரில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் எதுவும் அதுவரை வெளியிடப்படவில்லை.
கைது செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமானோர் ஜோதிடம் பார்க்கும் பணியை செய்துவந்தவர்கள் என்றும் மற்றவர்கள் இதர தொழிலில் ஈடுபட்டு வந்தனர் என்பது தெரியவந்துள்ளது.