முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 73-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தில்லியில், ராஜீவ் காந்தியின் சமாதி அமைந்துள்ள "வீர பூமி' என்ற இடத்தில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா, எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.