உன் மலத்தை நீயே கைகளால் அள்ளு: தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! 

திறந்த வெளியில் மலம் கழித்த தலித் பள்ளிச் சிறுமியை, உயர் ஜாதி ஆண் ஒருவர் அவளது கைகளாலாயே அவளது மலத்தை அள்ள வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.  
உன் மலத்தை நீயே கைகளால் அள்ளு: தலித் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! 

சாத்தர்பூர்: திறந்த வெளியில் மலம் கழித்த தலித் பள்ளிச் சிறுமியை, உயர் ஜாதி ஆண் ஒருவர் அவளது கைகளாலாயே அவளது மலத்தை அள்ள வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.  

மத்திய பிரதேசம் மாநிலம் லவ்குஸ்காகர் மாவட்டத்தில் உள்ள கிராமம் குட்ஹோரா. இங்கு அரசு துவக்கப் பள்ளியொன்று அமைந்துள்ளது. நேற்று மாலை அந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் இனத்தைச் சேர்ந்த  சிறுமி ஒருத்தி, ஆசிரியரின் அனுமதி பெற்று மலம் கழிக்கச் சென்றுள்ளாள்.

பள்ளிக்கு அருகே அமைந்துள்ள திறந்த வெளி ஒன்றில் அந்த சிறுமி மலம் கழிக்கும் பொழுது, அக்கிராமத்தினைச் சேர்ந்த பப்பு சிங் என்னும் உயர் ஜாதி ஆண் ஒருவர் பார்த்துள்ளார். சிறுமியின் செய்கையால் ஆத்திரம் அடைந்த அவர், சிறுமியை அவளது மலத்தினை அவளது கையால் அள்ளுமாறு செய்துள்ளார்.

மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியதும்நடைபெற்ற சம்பவத்தினை அந்த சிறுமி தன் பெற்றோரிடம்  கூறியுள்ளார். வெகுண்டெழுந்த அவர்கள் தங்கள் இன மக்களுடன் ஊர்வலமாக காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு சிங் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் சிங் மீதுவழக்கு தொ டரப்பட்டது. ஆனால் அவர் தப்பிச் சென்று விட்டதால், அவனைப் பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக லவ்குஸ்காகர் காவல் நிலைய அதிகாரி கான் தெரிவித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com