தமிழகத்தின் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மோடி, சமூக வலைதளமான டுவிட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஓ. பன்னீர்செல்வத்துக்கும், மற்றவர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். வரும் ஆண்டுகளில் தமிழகம் மிகப்பெரிய உச்சங்களை எட்டும் என்று நம்புகிறேன்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அனைத்து ஆதரவு மற்றும் உதவியையும் வழங்கும் என்று மத்திய அரசு உறுதியளிக்கிறது என்று மோடி அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.