இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது ஜியோஃபோன் முன்பதிவு!

ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த விலையில்லா ஜியோஃபோனுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24ம் தேதியான இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.
இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது ஜியோஃபோன் முன்பதிவு!


சென்னை: ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த விலையில்லா ஜியோஃபோனுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24ம் தேதியான இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடடின் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த ஜூலை 22ம் தேதி, நிர்வாகி முகேஷ் அம்பானி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

அதுதான், இந்தியர்கள் அனைவருக்கும் விலையில்லா 4ஜி ஸ்மார்ட்போன். இதன் விலை பூஜியம். இதற்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையும் 3 ஆண்டுகளில் திரும்ப வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த செல்போனை முன்பதிவு செய்யும் போது, ரூ.500ஐ கட்டணமாகச் செலுத்தி, ஜியோ ஃபோனை பெறும்போது மீதத் தொகையான ரூ.1000ஐ செலுத்த வேண்டும். 

இந்த செல்போனை 36 மாதங்கள் பயன்படுத்திய பிறகு, திருப்பிக் கொடுத்தால், ரூ.1,500 காப்பீடுத் தொகை வாடிக்கையாளருக்கு திரும்ப வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com